திருக்குவளையில் பிறந்து-
திருவாரூரில் படித்து-
விழுப்புரத்தில் நாடகம் போட்டு-
புதுச்சேரியில் தாக்கப்பட்டு-
ஈரோட்டில் பத்திரிக்கையாளராக உருப்பெற்று-
கோவையில் கதைவசன கர்த்தாவாக மாறி-
சேலத்தில் முழு சினிமாக்காரராகவே பரிணாமம் பெற்று-
சென்னையில் தி.மு.க.பிரசாரக்குழுச்செயலாளர் பதவியைப் பெற்று-
கோவில்பட்டியிலும் தூத்துக்குடியிலும் கட்சியைத் தொடங்கி வைத்து-
திருச்சியில் அண்ணாவுக்குப் பதிலாகப் பேசி-
தஞ்சை மாவட்டம் முழுக்க 26 நாட்கள் தொடர்ந்து அலைந்து கட்சியை வளர்த்து-
திருவையாற்றில் கறுப்புக் கொடி பிடித்து-
சென்னை மாநில மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் ஆகி-
கல்லக்குடி தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து-
திருச்சி சிறையில் சிற்றவதைப்பட்டு-
நாகையில் போட்டியிட வலம் வந்து-
குளித்தலையில் போட்டியிட்டு-
சேலம் தொடங்கி பல்வேறு ஊர்களில் உதயசூரியன் நாடகம் போட்டு-
நங்கவரம் விவசாயிகளுக்காகப் போராடி-
முதுகுளத்தூருக்கு விசாரணைக்குப் போய்-
பரமக்குடி சிவகங்கையில் கட்சியை வளர்த்து-
தேவகோட்டை இடைத்தேர்தலில் பிரசாரம் செய்து-
சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றி-
அதற்காக அண்ணா அணிவித்த மோதிரத்தை சேலத்தில் தொலைத்து-
அதை திருச்சி காமாட்சி எடுத்துக்கொடுத்து-
தஞ்சாவூர் தொகுதியில் வென்று-
சிதம்பரம் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் செயல்திட்டக்குழுத் தலைவர் ஆகி-
திருவண்ணாமலை இடைத்தேர்தலில் தி.மு.க.வை வெற்றிபெற வைத்து-
சென்னைக் கடற்கரையில் 10 லட்சம் ரூபாய் சபதம் ஏற்று -
நெல்லை இந்தி எதிர்ப்புப் போராட்டக்
களத்துக்குத் தலைமை வகித்து-
சென்னையில் அன்பகம் கட்டி-
தடுப்புக்காவல் சட்டப்படி கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு-
திருப்புமுனை மாநாடாம் விருகம்பாக்கம் தேர்தல் மாநாட்டு இடத்தைச் செம்மைப்படுத்தி-
சைதாப்பேட்டையில் நின்று வென்று தமிழகச் சட்டமன்றத்துக்குள் போனதால் தான் பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் வசமானது தமிழ்நாடு!
அவர் தலைவர் ஆன நாள் இது!
மூடிய காதுக்குள்ளும் செல்லும் குரல்! அது நூறாண்டுகள் கழித்தும் வெல்லும் சொல்!
Thursday, July 26, 2018
Thirumavelan padikaramu
Subscribe to:
Post Comments (Atom)
கார்டூனிஸ்ட் பாலா
அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...
-
தம்பி பிறந்து நான்கைந்து மாதங்களில், சிவகங்கை அரண்மனைக்கு எதிரான அரங்கில் கலைஞர் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார், அப்பாவும், அம்மாவும் ...
-
வாழ்க்கை ஒரு வட்டம். ஆனால் அந்த வட்டம் கோணல்மானலாகத்தான் இருக்கும் போல. ஆகப்பெரிய உள்ளூர்/வெளியூர் 'மானஸ்த' கம்யூனிஸ்ட் தலைவர்கள்...
-
தயவுசெய்து தற்கொலை செய்துகொள் நாங்கள் சமையலராக இருக்கிறோம் நாங்கள் சமைத்த உணவு உனக்கு வேண்டாமெனில்... நாங்கள் மருத்துவராக இருக்கிறோம் ...
No comments:
Post a Comment