Sunday, December 9, 2018

திருமாவளவன்

திருமால் வளவனல்ல....
திருமாவளவன்

திருத்திப்படியுங்கள்
திரிபுவாதிகளே !

மண்டியிட
கிருஷ்ணசாமியல்ல
அவன்

மானம்
காக்கும்
எல்லைச்சாமி !

கருவறைக்குள்
நுழைய
அவாளிடம்
அனுமதிபெற்று

பின்
கருப்பனின்
கழுத்தறுக்க
வா !

சேரிக்குள்
சிவனை
பெருமாளை
அனுமதித்துவிட்டு

உன்
சேனைகளை
இங்கு
அனுப்பு !

தீக்குளிப்பதற்கு
முன்...
கவனம்
சர்மா...

தீக்குச்சி
செய்த
குழந்தையின்
அழுக்கு

உன்னை
தீட்டாக்கும்
அபாயம்
உள்ளது !!

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " ...தொகுப்பிலிருந்து )

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...