கல்லூரியிலிருந்து
உன் வீட்டுத்தெருவில்
உன்னை
இறக்கிவிடும்போது
மறக்காமல்
என் கைகலில்
உன்
கையெழுத்திடுவாய்
போதாக்குறைக்கு
என் கன்னத்தில்
பேனாவால்
கோடிட்டுச்செல்வாய்
பார்ப்பவர்களுக்கு
எப்படி
புரியும்
நம் ஒப்பந்தம்?
இருசக்கர வாகனத்தில்
என் மீது
நீ சரியும்
தருணங்களில்
நான்
இவ்வுலகில்
இருப்பதில்லை
பறப்பேன்
என் கைகளில்
நீயிட்டக்
கையெழுத்துக்கொண்டே
சிலிர்ப்பேன் !
$ இன்றைய மழைப்பொழுதில் நனைந்த பழைய நினைவு
-தாகம் செங்குட்டுவன்
( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ?" ...தொகுப்பிலிருந்து )
No comments:
Post a Comment