Tuesday, July 31, 2018

தாகம் செங்குட்டுவன்

கல்லூரியிலிருந்து
உன் வீட்டுத்தெருவில்
உன்னை
இறக்கிவிடும்போது

மறக்காமல்
என் கைகலில்
உன்
கையெழுத்திடுவாய்

போதாக்குறைக்கு
என் கன்னத்தில்
பேனாவால்
கோடிட்டுச்செல்வாய்

பார்ப்பவர்களுக்கு
எப்படி
புரியும்
நம் ஒப்பந்தம்?

இருசக்கர வாகனத்தில்
என் மீது
நீ சரியும்
தருணங்களில்

நான்
இவ்வுலகில்
இருப்பதில்லை
பறப்பேன்

என் கைகளில்
நீயிட்டக்
கையெழுத்துக்கொண்டே
சிலிர்ப்பேன் !

$ இன்றைய மழைப்பொழுதில் நனைந்த பழைய நினைவு

-தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ?" ...தொகுப்பிலிருந்து )

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...