உனக்கு
குழந்தைகள்
இல்லை
குடும்ப அரசியலில்
நீ
சிக்கவேயில்லை !
ஆனால்
நீ உருவாக்கிய
கல்வித்தந்தைகள்
ஒரு குழந்தைக்கு
கல்வி தர
கோடி ரூபாய் கேட்கின்றனர் !
உன் காதலியை
எமக்கு
'அம்மா' ஆக்கினாய்
அனாதைகளாய்
தவிக்கின்றோம்
அவரைக் காணவில்லை !!
அள்ளி அள்ளி
நீ கொடுப்பாய்
என்பார்கள்
'5 கோடி' தவிர
நீ கொடுத்தது
எதற்க்கும் பயன்படவில்லை !
உன்னைப்பின்பற்றி
ஒன்றன் பின் ஒன்றாய்
வருகிறார்கள்
உன்னிடம்
விரைந்து அழைத்துக்கொள்
அவர்களை !
திரைத்தலைவர் சகாப்தம்
உன் 'அம்மு'வோடு
முடியட்டும்
தரைத்தலைவர் ஒருவரால்
தமிழர் வாழ்வு
விடியட்டும் !!
- தாகம் செங்குட்டுவன்
( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ?" - தொகுப்பிலிருந்து)
No comments:
Post a Comment