Sunday, July 29, 2018

தாகம் செங்குட்டுவன்

உனக்காக
நான் அச்சிட்ட
நூலை
உன்னிடம் தந்தபோது
" நல்லாயிருக்கியா ? "
என்று கேட்டாய் ....

கவிஞர் கனிமொழி
என்னை
உன்னிடம்
அறிமுகப்படுத்தியபோது
" நல்லாயிருக்கியா ? "
என்று கேட்டாய் .....

தாகம் இதழுக்கு
நேர்காணல்
கேட்டபோதெல்லாம்
" நல்லாயிருக்கியா ? "
என்று கேட்பாய் ....

" நீ
இப்போ
நல்லாயிருக்கியா
தலைவா  ? "

- தாகம் செங்குட்டுவன்

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...