உனக்காக
நான் அச்சிட்ட
நூலை
உன்னிடம் தந்தபோது
" நல்லாயிருக்கியா ? "
என்று கேட்டாய் ....
கவிஞர் கனிமொழி
என்னை
உன்னிடம்
அறிமுகப்படுத்தியபோது
" நல்லாயிருக்கியா ? "
என்று கேட்டாய் .....
தாகம் இதழுக்கு
நேர்காணல்
கேட்டபோதெல்லாம்
" நல்லாயிருக்கியா ? "
என்று கேட்பாய் ....
" நீ
இப்போ
நல்லாயிருக்கியா
தலைவா ? "
- தாகம் செங்குட்டுவன்
No comments:
Post a Comment