நான் - இந்த சமூகத்தில் பிறக்கவேண்டும் என நானா முடிவெடுத்து பிறந்தேன்!
இது இயற்கை ! ஆனால் நான் பிறந்த சமூகத்தை வைத்து என்னை 80% பேர் பிரித்துப்பார்ப்பது வேதனையாக இருக்கின்றது !
ரசினிகாந்த கட்சி தொடங்கினால், கமல் கட்சி தொடங்கினால், விசயகாந்த் கட்சி தொடங்கினால் - அது அனைத்து மக்களுக்குமானது என சொல்கிறார்கள்! .
ஆனால் மக்களுக்காக மட்டுமே களத்தில் நிற்கும் எமது இயக்கத்தையோ -தலித் களுக்கான கட்சி என தனித்து அடையாளப்படுத்த பார்க்கிறார்கள்!
ஆனால் எங்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் - இசுலாமியர்களும் , கிறித்தவர்களும் , பிற சமூகத்தை சார்ந்தவர்களும் &பெண்களும் அதிகமாக உள்ளனர்!
அதனால் மற்றவர்கள் எங்கள் மீது சுமத்தும் அடையாளம் உண்மையானது அல்ல ,
எமது விடுதலைச்சிறுத்தைகள் இயக்கம் - என்றும் ஒட்டு மொத்த மக்களுக்கான இயக்கம்.
No comments:
Post a Comment