" வாய்க்கரிசி
போட்றவனெல்லாம்
வர்சையில வா
கோடி துணி மேல
மோடி ஜீக்கு
ஜென்னு எழுது....
கொள்ளி
வைக்கறவன்
ஆதாரட்டயக்காட்டு
மறக்காம அதுக்கு
ஜி.எஸ்.டி
வரியைக்கட்டு ....
ஆதாரில்லாத
பொணம்
அனாதப்பொணம்
அதத்தூக்கி
வீசற எடமோ
ஏன்டி இந்தியன் வனம்" !!
- தாகம் செங்குட்டுவன்
No comments:
Post a Comment