சற்றேறக்குரிய 20 ஆண்டுகளுக்கு முன் .......
----------------------------------------------------------------
சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் வசந்தா கந்தசாமி மீது தொடக்கப்பட்ட வர்ணாசிரம வன்கொடுமை வரம்பு மீறியபோது.... உன் கைகளைப் பற்றி தரதரவென அந்த அக்ரகாரக் காட்டுக்குள் அழைத்துப் போனேன் !
காடு பொசுங்கியது ! பூணூல் அறுந்தது !!
சென்னை செருமன் அரங்கில் நடந்த தமிழகப்பெருவிழாவுக்கு , உன்னை சிறப்பு விருந்தினராய் அழைத்துச் சென்று சிலாகித்தேன் !
அங்கே ஓர் கைகலப்பு! பின்பு உன் பேச்சால் அரங்கத்தில் கையொலிப்பு !
என் உயிர் நண்பனின் தாய்க்கு இரண்டு சிறு நீரகமும் பழுது ! உடனடி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவை ! அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையோ அமைச்சர் சிதம்பரம் உறவினருக்கு சொந்தம் !
நள்ளிரவில் வெளிநாட்டில் இருந்த அமைச்சரிடம் பேசினாய் ! ஆறுதல் சாமரம் வீசினாய் !
இன்னொரு மருத்துவ உதவி. அப்போது அமைச்சர் செம்மலை சுகாதாரத்துறை அமைச்சர். உன்னிடம் கடிதம் கேட்டேன்...நீ சொன்னாய் ...." என் பேச்செல்லாம் எடுபடுமா செங்குட்டுவன்?
"
" எடுபடும் " என்றேன்!
அமைச்சரிடம் உன் கடிதம் நீட்டினேன். உன் பெயரைப்பார்த்த மாத்திரத்தில், தன் அரசுப்பெயரிட்ட ஓலையில் வெறும் கையெழுத்திட்டு , இப்படிச்சொன்னார் அமைச்சர்...." இதுல என்ன வேணுமோ எழுதிக்கிங்ங தம்பி " என்று !
உன் பலமறியாத யானை நீ ....
பேராசைக்கொள்ளாத பேரரசன் நீ ...
ஓயாமல் வேட்டையாடும் ....சைவச்சிறுத்தை நீ .....
தம்பிகளுக்காக வாழும் போது ....இடையிடையே உனக்கும் வாழுந்துகொள் !
" அண்ணனப்பாக்க நீ ஏன் அடிக்கடி வர மாட்ர? " கடிந்து கொள்வான் யாழ்பாணன்.
" காதலிய...கல்யாணம் எண்ணக்கூடாது !! " என்பேன் நான்.
மோடியை திரும்பிப்பார்க்காத கலைஞர்..உன்னை முறைத்துப்பார்த்தார்...
தினம்தோறும் நீ கலைஞரைப்பார்க்கச் சென்றிருந்தால் ....அவர் உயிர் பிழைத்திருப்பார் போலும் ....
தடய அறிவியல் நிபுணராய் தொடங்கியது உன் வாழ்வு ....இப்போதும் அதையேதான் செய்துகொண்டிருக்கிறாய் ....ஆம் , அரசியல் தடய அறிவியல்!!
"தாகம் " இதழின் ஆலோசகருக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!!
- அன்புத்தம்பி தாகம் செங்குட்டுவன்
No comments:
Post a Comment