இயக்குநர் மணிவண்ணன் அவர்கள், உடல்நிலை சரியில்லாத நாட்களில்கூட சிரமப்பட்டு டிஸ்கவரிக்கு வருவதை விரும்பினார். சிறிதுநேரம் டிஸ்கவரியில் இருப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். ஏற்கனவே அவரிடம் இருக்கின்ற புத்தகமாக இருந்தாலும் இருக்கட்டுமே என்று ஒரு புது பிரதியை வாங்கிக்கொள்வார். ஒரு கட்டத்தில் நடக்க முடியாத சூழல் ஏற்படும்போது, போன் செய்து வீட்டுக்கு அழைப்பார். புது புத்தகங்கள் என்னென்ன வந்திருக்கு என்று பார்த்து எல்லாவற்றிலும் ஒரு பிரதி கொண்டு வாங்க, பார்த்து எடுத்துக்கிறேன் என்பார். கொண்டு போனதும் ‘இருக்கட்டும் விடுங்க... எல்லாத்தையுமே வெச்சிடுங்க’ என்பார். ‘இந்தப் புத்தகம்லாம் இருக்குங்க.. ஆனா மேல மாடிக்குப் போய் எடுக்க முடியில, தேடனும்’ என்று சிரிப்பார்.
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த இந்தப் படம் அனைத்தையும் நினைவுக்குக் கொண்டு வருகிறது... இன்னும் எவ்வளவோ....
படமெடுத்த நாள் 30/12/2010 .
No comments:
Post a Comment