“நீயும் பத்திரிகையில்தானே பொழைப்பு நடத்துறே.. கருணாநிதிதானே அவரோட பேரு. அதைச் சொல்லாமல் கலைஞர்னு சொல்றியே......இதுதான் ஊடக அறமா?”
“அப்படிங்களா சரிங்க. . சுப்ரமணியன்தானே அந்த மகாகவியோட பேரு.. அப்புறம் ஏன் பாரதியார்னு எழுதுறீங்க. அதுதான் ஊடக அறம்னா, நீங்க பாரதியார்னு எழுதுற வரைக்கும் நானும் கலைஞர்னுதான் எழுதுவேன். நீங்க சுப்பிரமணின்னு எழுதுனா நானும் கருணாநிதின்னு எழுதுவேன்.. நீங்க மகாகவி சி.சுப்பிரணிய பாரதியார்னு எழுதுனா நானும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதின்னு எழுதுவேன்...“
“ம்..’’
“ஆமா.. அப்புறம் ‘செயல்’னா என்னன்னு தெரியுமா? தொழில் தர்மத்துக்காக கலைஞரை விமர்சித்து நாள்தோறும் விவாதம் நடத்தினாலும், உண்மையான உள்ளத்தின் உணர்வுடன் புகழஞ்சலி செலுத்த தி.மு.க சார்பில் மேடை அமைத்துக் கொடுத்து வாய்ப்பளிப்பதற்குப் பெயர்தான் ‘செயல்’.
No comments:
Post a Comment