70 வயதுக்கு மேலான முதியவர்
உயர்குடி பிறப்பாளர்,
மிக உயர்ந்த பதவி வகிப்பவரான ஒரு மாநிலத்தின் ஆளுனர் மீதே ... ஒரு பத்திரிக்கை தொடர்ந்து பாலியல் அத்துமீறல் குற்றசாட்டுகளை எழுதி வருகிறதென்றால்...,
இவ்வளவு நாள் விட்டுவைத்ததே தவறல்லவா?
அவர், நக்கீரன் மீது அவதூறு வழக்கு அல்லவா தொடுத்திருக்க வேண்டும்?
ஏன் தொடுக்கவில்லை?
நிர்மலா தேவி போலீஸ்சிடம் தந்த வாக்குமூலங்கள் என்ன? அவற்றின் ஆடியோ, வீடியோ பதிவுகளை மக்கள் மன்றத்தில் வைக்கும் துணிச்சல் உண்டா?
அல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறமுடியுமா?
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு தனக்கு கீழுள்ள ஒரு அதிகாரியை நியமித்து விசாரிக்க வைத்து,உண்மைகளை மூடி மறைப்பதில் காட்டிய அவசரமே அவரை காட்டிக் கொடுத்துவிட்டதே..!
’’ஐயோ பாவம் இவரைப் பற்றி இப்படியெல்லாம் எழுதுகிறார்களே..’’என மக்கள் அனுதாபப் படவில்லையே?
’’அடப்பாவி மனுஷா ..! இப்படியுமா?’’ என்றல்லவா அங்கலாய்க்கிறார்கள்!
நக்கீரன் என்ற ஒரு பத்திரிகை மட்டுமே ஊதி வந்த சங்கை..
இன்று ஒட்டு மொத்தபத்திரிகைகளும்,வீஷுவல் மீடியாக்களும் சேர்ந்து ஊத வைத்துவீட்டீர்களே..!
ஐயோ பாவம்.!.குற்ற உணர்வால் ஒரு மானில அரசும்,கவர்னரும் உரிய முறையில் வழக்கை கூட சிருஷ்டிக்க முடியாமல் இப்படி அவமானப் பட்டுவிட்டார்களே..!
No comments:
Post a Comment