உற்றுப்பார்
இருட்டிலும்
நிழலாக நானிருப்பேன்
உடுத்திப்பார்
அந்தச்சேலையை
நூலாக எனை நெய்திருப்பேன்
பாடிப்பார்
பிடித்தப்பாடலை
'ஓராயிரம் பார்வையிலே'
ஆடிப்பார்
படித்த பரதத்தை
வழிந்திடுவேன் உன் வியர்வையிலே
கிள்ளிப்பார்
நீயே உனை
வலியால் நானன்றோ துடித்திடுவேன்
அள்ளிப்பார்
நீரினை
கைகளில் நான்தானே தவழ்ந்திருப்பேன்
- தாகம் செங்குட்டுவன்
( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ " தொகுப்பிலிருந்து ...)
No comments:
Post a Comment