Thursday, November 8, 2018

தாகம் செங்குட்டுவன்

தீபா வலி ....!
------------
- தாகம் செங்குட்டுவன்

ஊரெங்கும் கேட்கிறது
வெடிச்சத்தம் ...
நான் உள்ளுக்குள்ளே
வெடிக்கிறேன் சத்தமின்றி

ஆடையின்றி நிற்கிறேன் ...
நாளை என் மகளுக்கு வேண்டுமே புத்தாடை

கற்பனை நரகாசுரன் வதம்
தீபாவளி கதை....
நிதம் வதம் செய்யப்படுகிறேன்-
வரிசையில் நிற்கிறார்கள் திருமால்கள்

குற்றம் நிரூபிக்கப்பட்டால்
தானாகவே போகிறதாம் பதவி...
திருந்தி வாழ நினைத்தாலும்
வட்டமிடுகிறதே  விபச்சாரிப் பட்டம்

என்னை விட்டு விடுங்கள்
வயதாகிறது என்றழுதேன்...
அறுபது வயது வாடிக்கையாளருக்கு
நான்தான் வேண்டுமாம்

எத்தனைக் காதல்   எத்தனை 
திருமணம் ?
அத்தனையும் முதலிரவோடு முடிந்தன

கவலையில்லை உழைக்கிறேன் ....
என் மகளுக்காக தாய்க்காக தங்கைக்காக

தந்தை வழிச் சமூகம் முகம் புதைத்து
என்னுள் எதையோ தேட ....
விட்டத்தைப் பார்த்தே எக்காளமாய்
சிரிக்கிறேன்-
நான் தாய் வழிச்சமூகம்!!!

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...