நிழல் என்கின்ற இருட்டு,
முழு நிலவை விழுங்க முனைந்த
அதே நாளில், அதே வேளையில்,
சில சாதி, மத, இன
வெறி கொண்ட
ஈவு இரக்கமற்ற
படித்த மிருகங்கள்
இந்த சூரியனையும்
விழுங்க பார்த்து தோற்றது.
இறுதி மூச்சு வரை
போராடிக்கொண்டிருக்கும்
அந்த போராளியின்
மரணத்தை எதிர் பார்க்கும்
பிணந்தின்னிக் கழுகுகளுக்கு
நான் சொல்வது இதுதான்.
மரணம் ஒரு நாள்
எல்லோருக்கும் உறுதி .
இரண்டு வருடம் அரசியலில்
இல்லை, அவரால் யாருக்கு
என்ன தொல்லை...
ஆனாலும் அவரை பார்த்து
நடுங்கும் கோழைகளே...
உங்களை நீங்களே
உறுதிப்படுத்திக்கொண்ட
நாள் இன்று.....ஆம்
மனிதம் இல்லா மிருகமென்று...
#longlivekalaignar
No comments:
Post a Comment