"அறிவுமதி அண்ணனை எங்குப்பார்த்தாலும் உரிமையுடன் கிண்டல் செய்வேன். பதிலுக்கு அண்ணனும் என்னை அடிக்கத் துரத்தி வருவார்.
அந்தக் கூட்டின் இன்னொரு கவிப்பறவையான அண்ணன் பழநிபாரதி " தாகம் " இதழ் மீது தணியாத தாகம் கொண்டவர். வாரத்துக்கு ஒருமுறையேனும் என்னிடம் பேசி விடுவார்.
அரை மணி நேரம் அந்தக் கவிஞன், தமிழ்ச்சமூகம் குறித்து கவலைகொள்ளும் நிமடங்கள், பல அறச்சீற்ற எரிமலைகள் வெடித்துக்கிளம்பும் .
" அடிடா ...அடிடா ...நம் எதிரிகளை எழுத்தால் அடிடா ..." கவலையுடன் முடித்துக்கொள்வார் அண்ணன்.
அண்ணனுக்கு நெஞ்சம் நிறைந்த தாலாட்டு நாள் வாழ்த்துகள்.
- தாகம் செங்குட்டுவன்
No comments:
Post a Comment