நான் ஒரு சக்ரவர்த்தியாக விரும்பவில்லை. அது என்னுடைய வேலையும் அல்ல. எவரையும் ஆட்சி செய்யவோ, கீழடக்கவோ விரும்பவில்லை. நான் எல்லோருக்கும் உதவவே விரும்புகிறேன்.
ஒவ்வொருவரின் மகிழ்ச்சியில்தான் நாம் விரும்புகிறோம், ஒவ்வொருவரின் துயரத்தின் மூலம் அல்ல.
வீரர்களே.. அடிமைத்தனத்துக்காகப் போராடக்கூடாது. சுதந்திரத்துக்காக மட்டும் போராடுங்கள்.
நாம் வேகம் பெற்றிருக்கிறோம்...ஆனால் நமது கதவுகளை நாமே இழுத்துச் சாத்தியிருக்கிறோம்.
வளமை வழங்கிய இயந்திரங்கள், நம்மை வறுமைக்கு ஆளாக்கியுள்ளன.
அறிவு நம்மை வக்கிர புத்தியுள்ளவர்களாக மாற்றியிருக்கிறது.
கெட்டிக்காரத்தனம், நம்மைக் கடின இதயம் கொண்டவர்களாகவும் கருணையற்றவர்களாகவும் ஆக்கியிருக்கிறது.
நாம் அளவுக்கு அதிகமாக யோசித்து, மிகவும் குறைவாக உணர்ச்சி வசப்படுகிறோம்.
இயந்திரங்களைவிட மனிதநேயம்தான் நமக்குத் தேவை. கெட்டிக்காரத்தனத்தை விட, கருணையும் நட்புறவும் தான் தேவை.
நமக்கு நிகழ்ந்துள்ள துயரங்களுக்குக்
காரணம் பேராசையின் தாக்குதல்தான். மனித குல வளர்ச்சியைக் கண்டு பயப்படும் மனிதர்களின் குரூரங்கள்தான்.
வீரர்களே! இந்தக் கொடியவர்களுக்கு நீங்கள் அடிபணியக்கூடாது.
உங்களை இளக்காரமாக கேலி செய்பவர்களுக்கு...
உங்களை அடிமைகளாக்குபவர்களுக்கு...
நீங்கள் இதைத்தான் செய்யவேண்டும் என்று கட்டளையிடுபவர்களுக்கு...
போரின் இரையாக மட்டுமே உங்களை நினைப்பவர்களுக்கு ...நீங்கள் அடிபணியக்கூடாது.
இயந்திர மனமும் இயந்திர இதயமும் உள்ள இயந்திர மனிதர்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டியதில்லை....
- சார்லி சாப்ளின்
தி கிரேட் டிக்டேட்டர்
தமிழில் : சிவன்
No comments:
Post a Comment