Monday, July 16, 2018

ரவிக்குமார்

ஒரு இளையராஜா பித்தனின் வேண்டுகோள்!
- ரவிக்குமார்

நேற்றிரவு தந்தி தொலைக்காட்சியில் கவிஞர் வைரமுத்துவின் நேர்காணலைப் பார்த்தேன். இசைஞானி இளையராஜா குறித்த கேள்விகள் பலவற்றுக்குப் பதிலளிக்காமல்  சிரித்தபடி தவிர்த்துவிட்டார்.

இளையராஜாவின் பல நல்ல டியூன்கள் கவிஞர் வைரமுத்து எழுதாததால்   வீணாகிவிட்டன என்பது என் அபிப்ராயம். அதுபோலத்தான் அவரது அற்புதமான வரிகளும் இளையராஜாவின் டியூன் இல்லாமல் பாழாகிப்போயிருக்கின்றன.

தாரை தப்பட்டை படத்தில் இளையராஜாவே எழுதியுள்ள ‘ இடரினும்’ என்ற டியூனுக்கான பாடலை மட்டுமல்ல அந்தப் படத்தின் மற்ற பாடல்களையும்  வைரமுத்து எழுதியிருந்தால் அந்தப் படம் பாடல்களுக்காகவே ஓடி  வெற்றிப் படமாக மாறியிருக்கும்.

தமிழ்ச் சினிமாவில்  இருக்கும் மகத்தான இசைக்கலைஞர் இளையராஜா. அவரது செருக்கைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர் காலத்துக்குப் பொருந்தாத இசையமைப்பாளர் என புறக்கணிக்கப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் கவிஞர் வைரமுத்துவோடு மீண்டும் இணைந்து பணியாற்ற சம்மதிக்கவேண்டும். அவர்மீது பித்துகொண்ட ஒரு ரசிகனாக நான் முன்வைக்கும் வேண்டுகோள் இது!

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...