ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள், பால் பண்ணை உரிமையாளர்கள், கோழி பண்ணை உரிமையாளர்கள் மற்றும் நாய்கள், பறவைகள் போன்ற செல்ல பிராணிகள் வளர்க்கும் நண்பர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு:
வரும் JULY 21.07.2018 சனிக்கிழமை அன்று விழுப்புரம் மாவட்ட கால்நடைகள் விவசாயிகள் சங்கம் சார்பில் கால்நடைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு பாரம்பரிய இயற்கை மூலிகை மருத்துவ பயிற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த முகாமில் கால்நடை மூலிகை மருத்துவர் ஐயா புண்ணியமூர்த்தி (பேராசிரியர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம்-ஓய்வு) அவர்கள் பயிற்சி தர உள்ளார்,
அதனை தொடர்ந்து மூலிகை தோட்டம் அமைத்தல், தோட்டத்தினை பராமரித்தல, மூலிகை நாற்றுகள் கிடைக்குமிடங்கள் மற்றும் மூலிகை மருந்துகள் தயாரிப்பு பற்றிய செயல்முறை விளக்கத்தினை திருமதி.பார்வதி நாகராசன் (ஆரோவில் - பாண்டிச்சேரி) அவர்கள் தர உள்ளார்கள்.
பயிற்சியின் போது காலை தேநீர், மதிய உணவு, மாலை தேநீர் மற்றும் குறிப்பேடு வழங்கப்படும். முன்பதிவு மிக அவசியம்.
பயிற்சி நாள் 21.07.2018
நேரம் :காலை 9.00 முதல்
இடம்: ஜெயசக்தி திருமண மண்டபம், ரெட்டியார் மில் நிறுத்தம், பாண்டி சாலை, விழுப்புரம்.
நன்கொடை:ரூ.250/-
தொடர்புக்கு
9443226467
8248806029
No comments:
Post a Comment