Thursday, November 15, 2018

தாகம் செங்குட்டுவன்

தீராக்
கூடலின்னிடையில்
திடுக்கிட்டுக்
கேட்டான்
ஆணலை ...

" உன்னுதட்டின்
உப்பெங்கே " ?

லயித்தபடி
கிடந்தப்
பெண்ணலை-
சலித்தபடி
சபித்தாள் ...

"சேமிக்கத்
தெரியாத
சோமாரிகள்
நாட்டின்
மழைநீர் "

என்னிதழை
ஓயாமல்
நனைக்கையில்
என் செய்வேன்
கடலா ?

- தாகம் செங்குட்டுவன்

( மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? தொகுப்பிலிருந்து )

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...