Sunday, November 18, 2018

தாகம் செங்குட்டுவன்

எதுகையும் மோனையும்
எதிரெதிர் திசை என்றானது

இங்கே இலக்கியம் இதயம்
இலக்கணம் இரு விழிகள்

ரகசிய யுத்தங்கள் நோக்கு வர்மத்தில் பல ஆண்டுகள் நிகழ்வதால்
வெட்டவெளி  முத்த நாடகங்கள் இங்கு  அவசியமற்றுப் போகின்றன

சந்திப்புகள் நொடி இழையில் நேர்வதால்
சந்திப்பிழைக்கே வாய்ப்பில்லை

திணிக்க வழியில்லை என்பதால்
போராட்டமும் இல்லை தியாகிகளும் இல்லை

வரிவடிவமே இன்றி
தொன்றுத் தொட்டு வாழ்கிறது ...

பாரெங்கும் வேர்பரப்பி தழைக்கும்
பார்வை மொழி !

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ? " தொகுப்பிலிருந்து....)

No comments:

Post a Comment

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...