Tuesday, October 30, 2018

வழக்கறிஞர் அருள்மொழி

படுகொலைகளுக்கு
தனித்தனியே காரணம் கற்பிக்கும் போக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிந்து கொள்வதற்காக இந்த நிகழ்ச்சிய்யை பகிர்ந்து கொள்கிறேன்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு..சென்னையில் தன் பதினேழு வயதுப் பெண்ணை பறிகொடுத்த பெற்றோர் மிகுந்த துயரத்துடன் ஒரு வழக்கறிஞராக என்னைத்தேடி வந்தார்கள். ஒரே மகள் உயிருக்குயிராக வளர்த்து வெளியூரில் திருமணம் செய்தால் நினைத்தபோது மகளைப் பார்க்க முடியாமல் போய்விடும் என்று நான்கு வீடுகள்தள்ளி இருந்த நண்பரின் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.

அவர்களின் நம்பிக்கைக்கு மாறாக நண்பர் மகன் அந்தப் பெண்ணை கொடுமைகள் படுத்தினான். அம்மா அப்பாவை பார்க்கக் தடை போட்டான் . மகள் இரண்டு நாட்களாக பட்டினி கிடக்கிறாள் என்று அறிந்து அந்த வீட்டிற்குப்போய் சமாதானம் செய்து வீட்டுக்கு வரச்சொன்ன தாயிடம் நீபோய் தோசை ஊத்தி வையம்மா நான் உடை மாற்றிக்கொண்டு வருகிறேன் என்று சொன்னாள் மகள்.

வீட்டுக்குள் போய் மூன்றாவது தோசையை ஊற்றும்போது தெருவில் மக்கள் திடுதிடுவென்று ஓட்டுகிறார்கள். அதில் ஒருபெண் இந்தத்தாயின் வீட்டை எட்டிப் பார்த்து " அடியே உன் மகள் நெருப்பில் எரிகிறாளாம் ஓடி வா " என்று அலறிக் கொண்டே ஓட.. பதறி ஓடிய தாய் தன் மகள் கொழுந்து விட்டு  எரிவதைப் பார்த்தார். மருத்துவமனைக்குச் சென்ற பின் அந்த மகள் இறந்து விட்டள்.

அந்த வழக்கை காவல்துறை ஆய்வாளர் அந்த மருமகன் தன் மகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகவும் அதை தன் கண்ணால் அந்தத் தாய் பார்த்ததாகவும் வாக்குமூலம் எழுதி, கையெழுத்து வாங்கினார். அந்த நாயயை தூக்கில் போட வைக்கிறேன் என்றும் ஆறுதல் கூறினார். ஆனால் வழக்கின் முடிவில் அந்த மருமகன் குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்யப்பட்டான். காரணம் சாட்சியங்களுடைய குறுக்கு விசாரணையில் மற்றவர்கள் சொல்லித்தான் சம்பவ இடத்திற்கு தாயும் ஓடி வந்தார் என்பது தெளிவாகிவிட்டது. காவல் துறை பொய் வழக்கு போட்டதாக நீதிமன்றம் கூறியது. அந்தத் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று என்னிடம் வந்தார்கள்.

நான் அந்தத் தீர்ப்பை எடுத்துக் கொண்டு புகழ் பெற்ற கிரிமினல் வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனை செய்தேன். அந்த வழக்கறிஞர் 5 நிமிடத்தில் தீர்ப்பின் முக்கிய பகுதிகளைப் படித்து விட்டுக் கூறினார், "அந்த இன்ஸ்பெக்டர் குற்றவாளிக்கு சாதகமாகவே வழக்கை பதிவு செய்திருக்கிறார்" என்று. பல்வேறு சந்தேகங்களைக் கேட்ட போது அவர் முத்தாய்ப்பாகக் கூறிய பதில் இதுதான்,

"நடந்ததை அப்படியே பதிவு செய்திருந்தால், தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக அந்த மருமகனுக்கு உரிய தண்டனை கிடைத்திருக்கும். அதிக பட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தில் அந்தத் தாய் பையெழுத்திட்ட தவறான வாக்குமூலம் தான் அவன் தப்பித்துக் கொள்ள உதவியது."

ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், நடந்திருப்பது மிகக் கொடூரமான ஒரு குற்றம். அது போக்ஸோ சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை வரை கிடைக்கச் செய்யும். நமது உணர்ச்சிக் கொந்தளிப்புகளை எல்லாம் போலீஸ் அறிக்கையாக அல்லது குற்றப்பத்திரிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவரவர் ஒரு புதுக்கதை எழுதுவது குற்றவாளிக்கு சாதகமாகத்தான் முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கழுத்தறுப்பட்ட அந்தக் குழந்தையின் கதறலும் உடைந்து போய்க்கிடக்கும் அந்தத் தாயின் முகமும் அந்தத் தந்தையின் வேதனைக் குரலும் என்னை அலைக்கழித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் நமது ஆதங்கமும் பதைப்பும் சரியான திசையில் செல்ல வேண்டும் என்கிற கவலை அதிகமாகிறது.

சமூகம் திருந்துவதும் முக்கியம் குற்றவாளி தண்டிக்கப்படுவதும் முக்கியம் என்பதை நினைவில் வெயுங்கள்.

ஆழி செந்தில்நாதன்

படத்தைப் பாருங்கள்.

மோடி அரசால் வல்லபபாய் பட்டேலுக்கு வைக்கப்படுகிற மிகப்பெரிய சிலைக்கான பெயரான Statute of Unity என்பதை பல மொழிகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதில் என்ன வேடிக்கையென்றால்,  சீனம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, வங்காள மொழிகளில் Statue of Unity மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள்.

தமிழ், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் ஒலிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். தமிழில் இது "ஸ்டேட்டுக்கே ஒப்பி .யூனிட்டி" என்று ஆகியிருக்கிறது!

(அரபி, உருது படிக்கமுடியவில்லை)

பாவிகளா, Google Translate இல் போட்டுப்பார்த்தால்கூட "ஒற்றுமை சிலை" என்று சரியாக வருகிறது.

சரிதான். இந்திக்கும் குஜராத்திக்குமே இந்த நிலைதான் என்றால், தமிழுக்கு கேட்பானேன்!
பாவம், இந்தியை ஆதரித்த குஜராத்தியான பட்டேல். பரிதாபம், இந்திவெறிபிடித்த குஜராத்தி மோடி!

இந்த ஒலிபெயர்ப்பு விவகாரம் திட்டமிட்ட அவமதிப்பு இல்லை (ஏனென்றால் இந்தி. குஜராத்தியிலும் ரஷ்யனிலும்கூட அது ஒலிபெயர்க்கப்பட்டிருக்கிறது).

ஆனால் இது மிகமோசமான அலட்சியத்தின் வெளிப்பாடு. இந்தியாவின் "ஆட்சி" மொழிக்கே இந்த கதி என்றால் இந்த பலகையை வடிவமைத்தவர்கள், உருவாக்கியவர்கள், வைத்தவர்கள், அனுமதிப்பவர்களின் மனநிலையை இது காட்டுகிறது. அநேகமாக இவ்வளவு மோசமான மொழிக்கொள்கை உள்ள நாடு உலகில் வேறெங்கும் இருக்காது.

இந்த அழகில் ஓர் உயரமான சிலையை வைத்து நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காக்கப்போகிறார்களாம், வெட்கங்கெட்டவர்கள்!

(பி.கு: நண்பர் Thiru Yo சொன்னது போல, இந்தச் சிலையை மட்டுமல்ல, இந்த பலகையையும் சீனாவிலேயே செஞ்சிருக்காங்க போலிருக்கு. சீனாக்காரன் பழிவாங்கிட்டான். அவனோடு சீன மொழியில் ஒழுங்காக மொழிபெயர்த்துவிட்டு, இந்தியாவின் "ராஷ்ட்டிரபாஷா"வில் ஒலிபெயர்த்திருக்கிறான்! மோடியின் தாய்மொழியையையும் விட்டுவைக்கவில்லை!. தேஷ்பக்தாள்ஸ் இதற்காக சீனாமீது படையெடுத்தால்கூட தப்பில்லை என்பேன்!)

Monday, October 29, 2018

தாகம் செங்குட்டுவன்

களைப்பறித்தவளை
பார்த்து
அழுதது
அரிசி ...

வேக்காடு
அதிகமென
பேசிக்கொண்டனர்
விருந்தில் !!

- தாகம் செங்குட்டுவன்

( " மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ? " தொகுப்பிலிருந்து )

வெட்டவெளளியில் முரட்டுக்குத்து !

கடந்த வாரம்.... சபரிமலையில் பெண்கள் நுழைவுப்போராட்டம்  குறித்து  நடிகர் சிவகுமாரிடம் செய்தியாளர்கள்   கருத்து கேட்டபோது, " யோவ் யோவ் "  என்று அவர்களிடம்  எகிறினார்.

தற்போது, ஒரு பொது விழாவில் அவரை செல்பி மூலம் படம் எடுத்த ஓர் இளைஞரின் கைபேசியை ஆக்ரோஷமாக தட்டி உள்ளார். கைபேசி கீழே விழுந்து நொறுங்கி உள்ளது.

தினம்தோறும் ஆன்மீகம், யோகா , ஹிந்து மதம் , பெரியோரை மதித்தல்  போன்ற போதனைகளையும் , சில நேரங்களில் ' ஆணுறை மற்றும் உடற் சூடு " வேதனைகளையும் அள்ளி வழங்கி வருகிறார் அண்ணன் சிவகுமார்.

"யோகக்கலை பயின்ற நீங்களே இப்படி டென்ஷனாகலாமாண்ணே ?  செல்பி கலாச்சார சீரழிவு என்றால் , நம் கலாச்சாரத்தை வளர்க்க உங்கள் மகன் ஞானவேல் ராஜா,  ' இருட்டு அறையில் முரட்டுக் குத்து ' படத்தை வெளியிட்டபோது , அவர் கன்னத்தில் நீங்கள் ஒரு குத்து விட்டிருக்கலாமே  ?

- தாகம் இதழுக்காக...சரவணன். க

Sunday, October 28, 2018

களம் காண தயங்கும் தி.மு.க !! கோவி.லெனின்

“30, 40 வருடங்கள் ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழுத் தகுதி ஆகிவிட முடியாது. அதுதான் தகுதி என நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம்” என்ற ரஜினியின் அதிர்ச்சி அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த பதினைந்துக்கும் மேற்பட்ட மாவட்டச் செயாலாளர்கள் நம்மைத் தொடர்பு கொண்டனர்.
“புத்தி பேதலிச்சிருச்சுன்னு எங்களையெல்லாம் சொல்லியிருக்காரு தலைவர். உண்மைதான், புத்தி பேதலிச்சதால 40 வருசமா இவர் பின்னால நின்றோம். அவரின் ஒவ்வொரு படம் ரிலீசாகும்போதும் எங்க கைக்காசைப் போட்டுத்தான் கட்-அவுட்டுக்குப் பாலாபிஷேகம், ரசிகர் மன்ற ஸ்பெஷல் ஷோவையெல்லாம் நடத்தினோம். எங்க குடும்பத்தை நடுத்தெருவுல விட்டுட்டு வந்து யாரும் பதவி கேட்கலை. மன்றத்துக்கு செலவு பண்ணுனேன்னு சொன்னா நான் நம்ப மாட்டேன்னு தலைவர் சொல்றாரே, செலவு இல்லாம பூத் கமிட்டி அமைக்க முடியுமா?
பொதுமக்களுக்கு பொறுப்பு கொடுக்கணும்னு சொல்றாரு. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், சவுதியில இருக்குறவர்களுக்கு இங்கே மன்றத்தில் பொறுப்பு கொடுத்தார்களே, அந்த மாதிரி ஆட்கள்தான் பொதுமக்களா?

புதுக்கோட்டை  மாவட்ட செயலாளரும் இல்லாம, மாவட்டப் பொறுப்பாளரும் இல்லாம சீராய்வுக் கூட்டம் நடத்துனதெல்லாம் தலைவருக்குத் தெரியுமா? கடலூர் மாவட்டத்துல நாலு ஒன்றியங்கள், ஒரு நகரப் பொறுப்புக்கு ஆட்கள் தேவைன்னு போன மாசம் பேப்பர்களில் விளம்பரம் கொடுத்த கொடுமையாவது தலைவருக்குத் தெரியுமான்னு எங்களுக்குத் தெரியலை”
-நக்கீரன், 2018 அக்டோபர் 27 இதழ் செய்தி.

இதுதான் ரஜினி  ரசிகர் மன்ற நிர்வாகிகளின் மனநிலை. அவர்களில் கணிசமானவர்கள் தி.மு.க.வினர். அதுபோலவே அ.தி.மு.க. ஆதரவு மனநிலை கொண்டவர்களும் உண்டு.  ரஜினி ரசிகன் என்ற மாத இதழை நக்கீரன் குழுமம் நடத்தியதால், 30 ஆண்டுகளாகவே ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் நல்ல தொடர்பில் உள்ளவர்கள். 
“தலைவரோட நம்பிக்கை வட்டாரம், கார்ப்பரேட் அரசியல் நடத்த நினைக்கிறது. கார்ப்பரேட் கம்பெனியில் எங்களை மாதிரி கைநாட்டுகளுக்கு என்ன வேலை?” என்கிறார்கள் ரஜினி மன்ற மாவட்டச் செயலாளர்கள்.

அதிருப்தியில் உள்ளவர்களில்  தங்கள் ஆதரவு மனநிலை கொண்டு நிர்வாகிகளை அ.தி.மு.கவும், டி.டி.வி. தரப்பும் அந்தந்தப் பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள் மூலம் நேரில் அணுகி தங்கள் கட்சியின் வாக்குகளாக மாற்றுவதில் முனைப்பாக இருக்கிறார்கள். தி.மு.க தரப்பிலோ முரசொலியில் சிலம்பம் ஆடி, அதனை அக்கப்போர் விவாதமாக்கி, அதன்பிறகு சலாம் வரிசை எடுத்து, முகநூல் கழகப் போராளிகளே கட்சிக்கு எதிராக வரிந்து கட்டி வீரம் காட்டும் வித்தையெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வின் மாநில-மாவட்ட-கிளைக்கழக நிர்வாகிகள் பலரும், அதிருப்தி மனநிலையில் உள்ள தி.மு.க. ஆதரவு ரஜினி மன்ற நிர்வாகிகளை சந்திப்பதோ பேசுவதோ இல்லை.

வெறும் பேச்சு, வேலைக்கு ஆகாது.  களத்தில் இறங்கி வாக்கு பலத்தை அதிகரிக்காமல் தேர்தல் வெற்றி சாத்தியமேயில்லை.

திருவள்ளுவர் ஆண்டு 2049 அய்ப்பசி 12

Saturday, October 27, 2018

பிரவீன் காந்தியின் பிதற்றல்....

ரஜினி சொம்புகளில் முக்கியமானவர் இயக்குநர் பிரவீன் காந்தி.  'விஜய் 2009 ஆண்டு கோக் விளம்பரத்தில் நடித்துவிட்டு 2014 இல் " கத்தி " படத்தில் கோக்குக்கு எதிராக பேசலாமா ? " என்று கேட்கிறார். தோழர் அந்தனன் ' வலைப்பேச்சு ' பேட்டியில் இதுபற்றி கேட்கும்போது திமிராக , பேட்டியை இடையிலேயே முடிக்கிறார்.

பிரவீன் காந்தி.... நீங்கள் தினம்தோறும் ஜால்ரா போடும் ரஜினியின் யோக்கியதை உங்களுக்குத் தெரியுமா? ரஜினியின் நெருங்கிய நண்பர் , மறைந்த காங்கிரஸ் எம்.பி அடைக்கலராஜ். அவர் தமிழ் நாட்டின் முக்கியமான  'பெப்சி கோலா ' டீலர்.  அவருக்காக 35 ஆண்டுகளுக்கு முன்பே பெப்சி குடிப்பதுப் போல் நடித்தவர்தான் உங்கள் யோக்கியவான் ரஜினி. அதன் பிறகு இன்னொரு கோலா விளம்பரத்திலும் ரஜினி நடித்துள்ளார். சொம்படிக்கும்போது யோசிச்சி அடிக்கனும் காந்தி  !!

தோழர் மதிமாறனுடன் நிற்போம்!

திட்டமிட்டு கோமாளியாக்கப்படுகிறாரா மதிமாறன்?
.....................
மதிமாறனை ஆதரிப்பதற்காக அல்ல இந்தப் பதிவு. எவருடைய ஆதரவும் இல்லாமல் தன் சொந்த தர்க்க பலத்தால் நிற்கக் கூடியவர் அவர். நான் பெரிதும் மதிக்கும் திராவிட இயக்கபோராளி. அவர் கருத்துகளை ஏற்காதவர்கள்கூட அவர் வாத திறமையை ரசித்து கேட்பதை பார்த்திருக்கிறேன். அவருடன் தனிப்பட்ட முறையில்  எனக்கு  பெரிய தொடர்புகள் இல்லை. ஆனால் அவரது பேச்சாற்றலின் ரசிகனாக இருந்திருக்கிறேன். பாரதி, ஜெயகாந்தனை அவர் விமர்சிக்கிற விதத்தில் எனக்கு மாற்று அபிப்ராயங்கள் உண்டு. ஆனால் அவரது விமர்சனம்  வெறுப்பிலிருந்து விளைந்த  வெற்று விமர்சனம் அல்ல. ஒரு கோட்பாட்டின் வழி நின்று எழுப்பும் விமர்சனங்கள் .நீங்கள் அதை ஒருவர் மீதுகொண்டு அபிமானத்தால் எதிர்கொள்ள முடியாது. அதற்கான தர்க்கம் உங்களிடம் இருக்க வேண்டும். உதாரணமாக காமராஜர் பற்றி மதிமாறன் வைத்த விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திராவிடத்திற்கு எதிராக இங்கு திட்டமிட்டு உருவாக்கபட்ட புனித பிம்பங்களை மதிமாறன் விவாதத்திற்கு உட்படுத்துகிறார் என்பதுதான் எல்லோருக்கும் சங்கடமாக இருக்கிறது. ஆனால் காமராஜர் பற்றிய மதிமாறனின் கருத்து ஒரு ஆழமான அரசியல் விவாதத்திற்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆனால் திருச்சி வேலுச்சாமி போன்றவர்கள் அவரை மோசமாக வசைபாடினார்கள்.

இரண்டு நாளாக நடந்துகொண்டிருக்கும் தோசை விவகாரத்திலொ மதிமாறன் ‘ டார்கெட் செய்யப்படுவது வெளிப்படையாக தெரிகிறது. அவர் சாதிய மேலாதிக்கத்திற்கும் மதவாதத்திற்கும் எதிராக பேசிய அனைத்துக்கும் கணக்கு தீர்க்க முற்படுகிறார்கள். இந்த ட்ரெண்டிங்கினுடைய நோக்கம் அவரை எப்படியாவது கோமாளியாக்க வேண்டும் என்பது. அப்படி கோமாளியாக்கிவிட்டால் அவர் பேசுகிற எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற மனநிலையை உருவாக்கிவிடலாம் அல்லவா. ?

இன்று அவரை கேலிப்பொருளாக விரும்பும் யாருக்கும் அவர்  யார் என்றே தெரியாது. மிக ஆழமான படிப்புக்கொண்ட திராவிட இயக்க சிந்தனையாளர் அவர். இசை. சினிமா குறித்து மிக கூர்மையான பார்வைகளைக்கொண்டவர். இளையராஜா பற்றிய அவரது  பார்வைகள் அவரது ஆழ்ந்த இசையறிவிற்கு உதாரணம். ஸ்ரீ தேவி மறைந்த அன்றுஅவரைப்பற்றி  நானும் மதிமாறனும் நியூஸ் 18 லைவ்வில் பேசியபோது  நடிப்புக் கலை பற்றிய மதிமாறனின் கூரிய நோக்கு என்னை வியக்கச் செய்தது. ஆனால் ஒருவரின் ஆளுமையை ஒரு தோசை உதாரணத்தை வைத்து காலி செய்ய முடியும் என்பது என்ன ஒரு வினோதமான சூழல்.

’உணவும் சாதியும்’ என்ற ஒரு திறந்த விவாதத்தை யாராவது மதிமாறனுடன் நிகழ்த்த தயாரா? நான் ஏற்பாடு  செய்கிறேன். எங்கள் யூ ட்யூப் சேனலில் அதை ஒளிபரப்புகிறோம். ஆனால் எதற்கு அவருக்கு எதிராக இவ்வளவு கூச்சல்? அவர் ஸ்டாலின் தான் ஒரே தளபதி என்று சொன்னதாலா? அவர்தான் முதலமைச்சராக வேண்டும் என்றதாலா? இதேதான் எனக்கு 2013 நான் திமுகவில் சேர்ந்தபோது நடந்தது. அப்போது நான் மிகக்கடுமையாக இணையத்தில் தாக்கபட்டேன். என் பெயரில் போலி முகநூல் கணக்குகள் துவங்கப்பட்டன. என்னை கிண்டல் செய்யும் பக்கங்கள்  நடத்தபட்டன. நான் எதை எழுதினாலும் தாக்கினார்கள். என் புகைப்படங்களை மார்ஃபிங்க் செய்தார்கள். என்னை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் உருவாக்கபட்டன. என்னை ஒருபுறம் கோமாளியாகவும் இன்னொருபுறம் வில்லனாகவும் கட்டமைத்தார்கள். இந்த வேலையை செய்தவர்களுக்கு யார் காசு கொடுத்தார்கள் என்பதுவரை எனக்குத் தெரியும். என்னைப்பற்றி எதுவுமே தெரியாத இணைய வாசிகளிடம் என்னைக்குறித்த முற்றிலுமான எதிர்மறை பிம்பம் உருவாக்குவதுதான் அவர்கள் நோக்கம். இன்றளவும் அந்த வேலை நடக்கிறது. நான் பேசுகிற யூ ட்யூப் காணொளிகளுக்கு கீழே போடப்படும் பதிவுகளைப்போய் பாருங்கள். போலி கணக்குகள் வழியே எவ்வளவு வசவுகள் கொட்டப்படுகின்றன என்று. சாதிய மதவாத உணர்வுகொண்ட திராவிட எதிர்ப்பு சக்திகள் இதை அமைப்பு ரீதியாகவே திட்டமிட்டு அரங்கேற்றிவருகின்றன. டான் அசோக் , மனுஷ்ய புத்திரன், மதிமாறன் என இதற்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது. இணையப்பெருவெளியில் கருத்தியல் தளத்தில் திராவிடத்தின் குரல் ஓங்கி ஒலிக்கும் காலத்தில் அதை சிதைப்பதற்கான தந்திரம் இது. இணையத்தில் காசு செலவழித்தால் யாருக்கு எதிராகவும் எதையும் ட்ரெண்டிங் ஆக்கலாம்.

இறுதியாக,  மதிமாறனின் தோசை விவகாரம் நேர்மையாக விவாதிக்கப்படவேண்டியதே தவிர கும்பலாக சேர்ந்துகொண்டு கூச்சல்போடும் காரியமல்ல. சாதி மட்டுமல்ல, வர்க்கம், பாலினம் எல்லாமே உணவில் இருக்கிறது. நான் பிறந்து வளர்ந்த சமூகத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. ஆனால் சிறுவயதில் எங்களுக்கு வீட்டில் மெலிதான முறுகலான தோசை கிடைக்கும். ஆனால் வீட்டு வேலைகாரர்களுக்கு தடிமனான தோசைதான் கிடைக்கும். இதைவிட அம்மா எங்களுக்கு மெலிதான முறுகல் தோசை வார்த்துக்கொடுத்துவிட்டு தனக்கு கனமான தோசை ஊற்றிக்கொள்வார். இப்படி ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது.

திராவிட அரக்கர்களை போரிட்டு வெல்ல முடியாது என்பதால் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுவிடலாம் என்று பார்க்கிறார்கள். அதுதான் இந்த தோசை விவகாரம். மதிமாறனின் இமேஜை காலிசெய்தால் யாருக்கு அது உபயோகம் என்பதை மட்டும் புரிந்துகொண்டால் உருவாக்கப்பட்ட இந்த சர்ச்சையின் பின்புலம் புரியும்

- மனுஷ்ய புத்திரன்

Friday, October 26, 2018

முருகதாசா ? திருட்டுதாசா ?

முருகதாசா ? திருட்டுதாசா ?
சறுக்கிவிழுந்த சர்கார் !!
--------------------------------------------------

இயக்குநர் முருகதாசின் " கத்தி " படத்தின் பலக்காட்சிகள் திருடப்பட்டக்காட்சிகள் என்பது நிருபிக்கப்பட்டது. அதே இயக்குநரின் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கும் நிலையில், "சர்கார்" படத்தின் கதையாவது திருட்டுக்கதையல்ல , என்பதை முதலிலேயே உறுதி செய்திருக்கலாம். ஆனால், முருகதாஸ் , இரண்டாவது முறையாக விஜய்யை ஏமாற்றி உள்ளார். பல ஆண்டுகள் கழித்துப் படத் தயாரிப்பில் இறங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் ஏமாற்றி உள்ளார்.

திரைப்பட எழுத்தாளர் சங்கத்தலைவர் இயக்குநர் பாக்கியராஜ் , முருகதாசின் திருட்டுக்குறித்து முழு விசாரணை செய்து , 'சர்கார்' கதை, உதவி இயக்குநர் வருண் 10  ஆண்டுகளுக்கு முன் எழுதி பதிவு செய்த 'செங்கோல்' கதை  என்பதை உறுதி செய்தும், முருகதாஸ் அதை ஏற்க மறுக்கிறார் .

உதவி இயக்குநர் வருண் நீதிமன்றத்தை நாடி உள்ளார். அப்டியென்றால் , திரைப்பட எழுத்தாளர் சங்கம் என்று ஒன்று எதற்கு? திரைப்பட சங்கத்துக்கே கட்டுப்படாத முருகதாஸ் மீது  இயக்குநர் சங்கம் ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது?

இந்தத் திருட்டுக்கு சன் பிக்சர்ஸ் மற்றும் நடிகர் விஜய் வாய் மூடி அமைதி காப்பது, 'திருட்டு' தாசுக்கு துணை நிற்கும் செயல்.

நடிகர் விஜய் உடனடியாக களத்தில் இறங்கி, உதவி இயக்குநர் வருணுக்கு நியாயம் கிடைக்க வழி செய்யவில்லை என்றால்.....அவர் 'சர்கார்' மேடையில் பேசிய அத்தனை வசனமும் பொய் என்று உறுதியாகிவிடும். தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்த சன் பிக்சர்ஸ், வருணுக்கு நியாயம் வழங்க மறுத்தால் , அது தி.மு.கவை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.

முருகதாஸ் எனும் 'திருட்டு' தாசை ....திரையுலகம் விரட்டி அடிக்க வேண்டும்.  இவரால் பாதிக்கப்பட்ட 'அந்த' ஆந்திர நடிகை என்னப்பாடுப் பட்டிருப்பாரோ ?

# தாகம் இதழுக்காக....கரிகாலன்

சித்ரா லட்சுமணன்

நெஞ்சம் மறப்பதில்லை 119

கவிஞர் கண்ணதாசனின் கடைசீ நாட்கள்

-சித்ரா லட்சுமணன்

அமெரிக்காவிற்கு சென்ற  கவிஞர் கண்ணதாசன் அங்கே முதலில்  என்ஜினீயர் சிவானந்தத்தின் வீட்டில் தங்கியிருந்தார்.சிவானந்தத்தின் மனைவி ஈஸ்வ்ரி ஒரு மருத்துவர்.கண்ணதாசனுக்கு அலர்ஜி எதாவது இருக்கிறதா என்று பரிசோதித்த அவர் கவிஞரின் உடலில் பெரிதாக குறையேதும் இல்லை  என்று நற்சான்று வழங்கினார்.சிவானந்தத்தை அடுத்து மருத்துவர் ஆறுமுகம் வீட்டில் கவிஞர் தங்கியிருந்தபோது அவரது சிந்தனை முழுவதும் சென்னைக்கு எப்போது திரும்பப் போகிறோம் என்பதிலேதான்  இருந்தது. கவிஞருக்கு  மதுப்பழக்கம் உண்டு என்பதால் அவரது நுரையீரல் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறதா எண்பதைப்பற்றி மருத்துவரான ஆறுமுகம் ஒரு பரிசோதனை செய்ய விரும்பினார். கவிஞருக்கு அதிலே உடன்பாடில்லை.அந்தப் பரிசோதனையை தள்ளிப்போட அவர் எவ்வளவோ முயற்சி செய்தார்.  அந்த  முயற்சிகள் பலனளிக்காத நிலையில்  சோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பரிசோதனை முடிந்த அரை மணி  நேரத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட   மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கவிஞர்   சிறிது நேரத்திலேயே தன்னுடையை நினைவை இழந்தார்.
 
கண்ணதாசன் நினைவை இழந்து விட்டார் என்ற செய்தி இடியென தமிழகத்தைத் தாக்கியது.அந்தச் செய்தி அறிந்த அடுத்த கணமே கவிஞரின்  மனைவி பார்வதி அம்மாள், மகன் கலைவாணன், கண்ணதாசனின் மூன்றாவது மனைவியான வள்ளியம்மாள் அவரது மகள் விசாலி  ஆகியோர் அமெரிக்கா விரைந்தார்கள்.

கவிஞரின் வாழ்நாளோடு காலம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்ததால் அவருக்கு நினைவு திரும்புவதும் போவதுமாக இருந்தது. அப்படி நினைவு திரும்பியபோதெல்லாம் "விசு அந்த டியுன் போடுடா" என்றும், "இந்த பல்லவி நன்றாக இருக்கிறதா  பார்" என்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவாக மாறி மாறி பிதற்றத் தொடங்கினார் கண்ணதாசன். நினைவு தப்பி தப்பி வந்த அந்த கணத்திலும் தப்பாமல் அவர் மனதில் பதிந்திருந்தது மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன் மட்டுமே என்ற  செய்தி  அப்போது முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை எட்டியது.  உடனடியாக எம் எஸ் விஎஸ்வநாதனைத் தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்  "கவிஞர் உன் நினைவாகவே இருக்கிறாராம்.   நீ போய் அவரிடம் பேச்சு கொடுத்தால்  அவரது நினைவு திரும்ப வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் . அதனால்  நீ ஒரு முறை அமெரிக்கா போய் வந்து விடுகிறாயா?"என்று  கேட்டபோது தான் அப்போது இருந்த நெருக்கடியான சூழ்நிலையைப்பற்றி எம்.ஜி.ஆருக்கு  விஸ்வநாதன் விளக்கமாக எடுத்துச் சொன்னார். 

உடனடியாக எம்.  ஜி. ஆருக்கு ஒரு யோசனை பிறந்தது.  எம் எஸ் விஸ்வநாதனின்  குரலை பதிவு செய்து அமெரிக்காவிற்கு  அனுப்பி கண்ணதாசனை   அந்தக் குரலை கேட்கச் செய்யலாம்  என்று முடிவெடுத்த  எம்.  ஜி.  ஆர், "நீங்க டியுன் போடற மாதிரியும், கவிஞர்கிட்டேயிருந்து பல்லவி எழுதி வாங்கற மாதிரியும், அவர் எழுதிய பல்லவியை மாத்தித் தரச் சொல்கிற மாதிரியும், கவிஞர் இங்கே இருந்தால் எப்படி கிண்டலும் கேலியுமாக பேசுவீர்களோ அப்படி பேசி அதை ஒரு டேப்பில் பதிவு செய்து கொடுங்கள்.  அதை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கலாம்.  உங்களது குரலைக் கேட்டு கண்ணதாசன் ஆறுதல் அடையவும்,குணமடையவும்  வாய்ப்பிருக்கிறது"  என்று விஸ்வநாதனிடம் கூறினார்.அவ்ர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மெல்லிசை மன்னார் தன்னுடைய குரலைப் பதிவு செய்து எம். ஜி. ஆருக்கு அனுப்பினார்.
  
ஆனால் விஸ்வநாதனின் குரல் பதிவு செய்யப்பட்ட அந்த ஒலி நாடா அமெரிக்காவை அடையும் முன்பே கண்ணதாசனின் நாடித் துடிப்பு முழுவதுமாக அடங்கி விட்டது

1981ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24 ஆம் தேதி சிகாகோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மகா கவிஞன் 85 நாள் போராட்டத்துக்குப் பிறகு அக்டோபர் மாதம் பதினேழாம் தேதி இந்திய நேரப்படி பகல்  1௦.45 க்கு இயற்கையோடு கலந்துவிட்டார்.

"கன்னியின் காதலி" என்ற படத்தில் "க" என்ற எழுத்தில் தொடங்கும்  "கலங்காதிரு மனமே" என்ற பாடல் வரிகளோடு தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த  அந்த கவிச்சக்ரவர்த்தியின் கடைசி பாடலும் "க" என்ற எழுத்தில் தொடங்கிய  "கண்ணே கலைமானே" என்ற பாடலாகவே  அமைந்தது. 

அக்டோபர் 21ஆம் தேதி விமானம் மூலம் கண்ணதாசனின் உடல்  சென்னைக்கு கொண்டு வரப்பட்டபோது விமான நிலையத்துக்கு வந்து அவரது உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.  ஜி.  ஆர் ,"அரசவைக் கவிஞரான கண்ணதாசனின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும்" என்று அறிவித்தார்.  

கண்ணதாசன் இறந்து இப்போது முப்பத்தி ஏழு  ஆண்டுகள் ஆகின்றன. அந்த மரணம் அவரது உடலுக்குத்தானே தவிர அவரது எழுத்துக்கு இல்லை என்பதை அவரது படைப்புகள் இன்றுவரை நிரூபித்து வருகின்றன .

தன்னைப் பற்றி பிறர் விமர்சிக்க இடம் கொடுக்காமல் தன்னைப் பற்றிய விமர்சனத்தை நடு நிலையோடு தானே எழுதிய மாபெரும் கவிஞர்   கண்ணதாசன்

"நிச்சயமாக என் வாழ்க்கை பரபரப்பான ஒரு நாவல்தான். இவ்வளவு திருப்பங்கள் வேறு யாருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்க முடியாது. அதே நேரம் நானே வெட்கப்பட்டு மறைத்துக்கொண்ட விஷயங்களும் என் வாழ்க்கையில் உண்டு. இருப்பினும் என்னை யாரும் எப்போதும் மறந்து விட முடியாது என்ற நிம்மதி சாவதற்கு முன்னாலேயே எனக்கு வந்து விட்டது
உலகில் பலருக்கு இல்லாத நிம்மதி எனக்கு உண்டு.  தங்களது வாழ்நாளில் எழுதிக் குவித்த பலர் அவர்களுடைய மரணத்துக்குப் பின்னரே மதிக்கப்பட்டார்கள்.
அந்த வகையில் வாழும்போதே மதிக்கப்பட்டதற்காக இந்த தமிழ் மண்ணை விழுந்து முத்தமிடுவதே நான் செலுத்தும் நன்றிக் கடன்.
பெற்றவள் நினைத்தாளா பிள்ளை இப்படி வளருவான் என்று? தமிழ் இலக்கிய வரலாற்றில் என் பெயரை சேர்த்துக் கொடுத்த தெய்வத்துக்கு என் நன்றி.

நான் எழுதியதை விட எழுதாமல் விட்டது அதிகம். ஆனால் நான் எழுதியதே அதிகம் என்று மற்றவர்களுக்குத் தோன்றுகிறது. என்னைப் பிறரும் கெடுத்து நானும் கெடுத்துக் கொண்ட பிறகு மிச்சமிருக்கும் கண்ணதாசனையே நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால் எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று பலமுறை நான் ஆதங்கப் பட்டதுண்டு “ என்று தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டவர் கண்ணதாசன்.

தன்னுடைய ஆருயிர் நண்பனின் பிரிவை தாங்கிக் கொள்ள  முடியாமல்
"கண்ணதாசா ! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா"
என்று கண்ணீருடன் தனது கவிதாஞ்சலியைத் தொடங்கிய கலைஞர் கருணாநிதி
"அடடா! அந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்
ஆயிரங்காலத்து பயிர் நம் தோழமையென
ஆயிரங் கோடிக் கனவுகள் கண்டோம்
அறுவடைக்கு யாரோ வந்தார்
உன்னை மட்டும் அறுத்து சென்றார்
நிலையில்லா மனம் உனக்கு !ஆனால்
நிலை பெற்ற புகழ் உனக்கு
எத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டி தூங்க வைத்தாள் "
என்று தன்னுடைய கவிதாஞ்சலியில் குறிப்பட்டிருந்தார்

"எத்தனைக் கவிஞர் நாங்கள்
இருந்தாலும் கவிஞன் என்றால்
அத்தனை பேருக்குள்ளும்
அவனையே குறிக்கும் என்று
முத்தமிழ்க் கவிதை  நாட்டின்
முடிசூடிக் கொண்டான்"
என்று கவிதை பாடி தனது சோகத்தைத் தீர்த்துக் கொண்டார் கவிஞர் புலமைப்பித்தன்

ஆனால் இந்த கவிஞர்கள் எழுதிய எல்லா வரிகளையும் தாண்டி தான் உயிரோடு இருக்கும் போதே தன்னைப்பற்றி ஒரு கவிதை எழுதியது மட்டுமின்றி அதை ஒரு திரைப்படத்திலே பாடியும்  இருந்தார்  கவிஞர் கண்ணதாசன்

"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"
என்ற அந்த வரிகள் சத்தியத்தின் வாக்கு என்பதை இன்றுவரை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது காலம்.

-தொடரும்

கார்டூனிஸ்ட் பாலா

அது ஒரு கனா..! --------------------------------- வாழ்ந்து கெட்ட வீட்டின் முன் நின்ற வலியை அறிந்திருக்கிறீர்களா.. இதுவும் அப்படியான ஒரு வீ...